Posts

தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

சிவனை அபிஷேகம் செய்யும் நந்தி பகவான் | நந்தி தீர்த்த கோவில் | Nandi theertha temple

Image
400 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து நீர் வழியும் அதிசயம் - எங்கியிருந்து அந்த நீர் வருகிறதென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை இப்படி விசித்திரமான நந்தி கோயிலை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இது இனியவை ஆயிரம். இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காம நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க,  பெல் பட்டன கிளிக் பண்ணுங்க தொன்மையான கோவில்களில் உள்ள அதிசயமான கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள் ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு. நமது முன்னோர்களால் அமைக்கப்பட்ட பெரும்பாலான கோவில்களில் அறிவியலின் நுட்பமான பார்வைக்கும் புலப்படாத ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருப்பதுண்டு. இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில்  கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில் அதிசயம் எதுவுமில்லை. ஆனால்,  எல்லா சிவாலயங்களிலு

பாண்டியர்கள் செதுக்கிய அதிசயம்

Image
கழுகுமலை வெட்டுவான் கோயில் கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும். இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குடைவரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால் மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இக்கோயில் தமிழர்களின் கட்டத்திறைமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரே கல்லினால் ஆன கோயில் என்பது தான் சிறப்பு, ஒரு பெரிய மலையை ப வடிவில் செதுக்கி அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி கோயிலை மேலிருந்து க

மீன ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மீனம்: அமைதியான வாழ்வை விரும்பும் மீனராசி அன்பர்களே! புத்திரர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் உத்வேகமும் செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். புத்திரரின் விருப்பங்களை பணவசதிக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். எதிர்கால தேவை கருதி பணம் சேமிக்கவும் செய்வீர்கள். உறவினர்கள் நல்ல ஆலோசனை சொல்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் சிறப்பிடம் பெறுவர். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமாக  செழித்து வளரும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். பரிகாரம்:  சாஸ்தா வழிபாடு சகல நலமும் தரும்.

கும்ப ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
கும்பம்: பணியை நேர்த்தியுடன் மேற்கொள்கின்ற கும்பராசி அன்பர்களே! உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பரால்  உதவி உண்டு.  திட்டமிட்ட பணி இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை சிறப்பாகும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர்  விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழிலில்  உற்பத்தி விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர்.சலுகையும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன்களை பேணிக்காத்திடுவர். பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

மகர ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மகரம்: மாற்றுத்திட்டத்தால்  அதிக நன்மை பெறும் மகரராசி அன்பர்களே! நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் தைரியம் வளரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தாயின் மனமறிந்து தேவையான உதவியை வழங்குங்கள். புத்திரரை இதமாக வழி நடத்தி படிப்பு செயல்திறனில் முன்னேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும். குலதெய்வ அருள் துணை நின்று உதவும். நண்பர்க்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சீரான ஓய்வில் உடல்நலத்தை பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் நல்ல வளர்ச்சி பெறும்.   பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். பரிகாரம்: மீனாட்சி வழிபாடு வெற்றியளிக்கும்.

தனுசு ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
தனுசு: புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும் தனுசுராசி அனபர்களே! குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். அன்புக்கு உரியவரின் ஆலோசனை உற்சாகம் தரும். மனதில் தெளிந்த சிந்தனை பிறக்கும். வெளியூர் பயணம் தாமதமாகும். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு  செயல்படுவதில் தயக்கம் கொள்வார். பணப்பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். உடல் ஆரோக்கியம்  சீராக இருக்கும்.  எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளிலும் ஆர்வம் கொள்வர். மனைவியின் சொல்லும் செயலும் குளறுபடியை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வதற்கான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன்களை பேணிக்காத்திடுவர். பரிகாரம் :  சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிக ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
விருச்சிகம்: துன்பம் அடைந்தவருக்கு ஆறுதலாக உதவும் விருச்சிகராசி அன்பர்களே! மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். மன அமைதியை பாதுகாக்கவும். புதிய வீடு வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். புத்திரர் சில விஷயங்களில் பிடிவாதமுடன் நடந்து கொள்வர். இஷ்டதெய்வ வழிபாடு சில நன்மைகளை பெற உதவும். வழக்கு விவகாரத்தில் சமயோசித செயலால் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். மனைவி வழி சார்ந்த உறவினர்களிடம் முன் யோசனையுடன் பழகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் மாறுதலுக்கு உட்படலாம். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். பரிகாரம் :  துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.       

துலா ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
துலாம்: சமயோசித செயலால் சாதனை புரியும் துலாம்ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும். மனைவியின் செயல்களில் சிறு குளறுபடி வரலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். பணியாளர் நிர்வாகத்திடம் நன்மதிப்பு சலுகை பெறுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர்.  பரிகாரம்:  அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்

கன்னி ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
கன்னி: தான் செய்த உதவியை பிறரிடம்  பேசாத கன்னிராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேசுவதில் நிதானம் இருக்கும். நண்பரின்  உதவி திருப்திகர அளவில்  கிடைக்கும். புதிய வாகனம் வாங்குகின்ற முயற்சி நிறைவேறும். புத்திரர் மனதில் ஆன்மிக எண்ணம் வளரும்.படிப்பு வேலையிலும் முன்னேறுவர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். ஆடம்பர பணச்செலவுகளை  தவிர்க்கவும்.  மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். பெண்கள் அக்கறையுடன் குடும்பநலன் பாதுகாத்திடுவர். பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.