கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 182725 பலியானவர்களின் எண்ணிக்கை 7174 மீண்டவர்களின் எண்ணிக்கை 79883
கொரோனா வைரஸ் முதலில் பாதித்த இடம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை பலி கொண்ட சார்ஸ் வைரஸின் 70 சதவீதத் தன்மையை இந்த கொரோனா வைரஸ் ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும்.
இந்தியாவில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்
- மகாராஷ்டிரா 38
- கேரளா 24
- உத்தரப்பிரதேசம் 14
- ஹரியானா 14
- கர்நாடகா 07
- டெல்லி 06
- ராஜஸ்தான் 04
- லடாக் 03
- தெலங்கானா 03
- ஜம்மு காஷ்மீர் 02
- உத்தரகாண்ட் 01
- பஞ்சாப் 01
- ஒடிசா 01
- ஆந்திரா 01
- தமிழ்நாடு 01
இந்தியாவில் இதுவரை மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்
செய்ய வேண்டியது:
- எப்பொழுதும் சுத்தமாக இருத்தல் அவசியம்
- அடிக்கடி கைகளை சோப்பால் நன்கு கழுவ வேண்டும்
- தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய்யை மூட வேண்டும்
- உடல் நலக்குறைவு இருந்தால் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும்
- பொது இடங்களுக்கு செல்வதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
செய்ய கூடாதது:
- காய்ச்சல், இருமல் இருந்தால் யாருடன் நெருங்கி தொடர்பு வைக்க கூடாது
- பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது
- கால்நடைகள் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
- செல்ல பிராணிகளுடன் நெருக்கமாக பழகக்கூடாது,
இந்த நோய் பெரும்பாலாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் வெகு விரைவாக தாக்குகிறது. எனவே உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்திக்கான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கான அறிகுறி
அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ சளி மற்றும் தொண்டைப்புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்றவையாகும்,
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முட்டைக்கோஸ் ஜூஸ் செய்முறையை பின்பற்றுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது.
முட்டைக்கோஸ் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது - கால்கப்
காரட் துருவல் - 1கப்
மிளகுத் தூள் - கால் ஸ்பூன்
சீரகத் தூள் - கால் ஸ்பூன்
இந்துப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1 கப்
செய்முறை
அனைத்து பொருட்களையும ஒன்றாக போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின் அதை அரிப்பில் வடிகட்டவும். தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து பருகவும்.
பயன்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூட்டு வலிக்கு நல்லது. கண்களுக்கு நல்லது. வயிற்றுப் புண்களை ஆற்றும். மலச்சிக்கலை அகற்றும்.
Comments
Post a Comment