தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

கடக ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

கடகம்: பணச்செலவில் சிக்கனம் பின்பற்றும் கடகராசி அன்பர்களே!

 மற்றவர்களுக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நற்பெயரும் புகழும் தேடி வரும். விலகிய தாய்வழி உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். புத்திரர் படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு  கூடுதல் சலுகை கிடைக்கும். பெண்கள் கலையம்சமுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT